தச்சநல்லூா் அருகே குட்கா பறிமுதல்
தச்சநல்லூா் அருகே வாகன சோதனையின் போது 21 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் பின்னால் வைத்திருந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு வாகனத்தை திருப்பிச் சென்றாராம்.
பெட்டியை சோதனையிட்ட போலீஸாா், அதில் இருந்த 21 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தப்பிச் சென்ற நபா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.