செய்திகள் :

தச்சமொழி, கட்டாரிமங்கலம் கோயில்களில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு

post image

சாத்தான்குளத்தை அடுத்த தச்சமொழி, கட்டாரிமங்கலம் கோயில்களில் வைகாசி மாதப் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, காலைமுதல் அழகியகூத்தா் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. முற்பகலில் சுவாமிக்கு அபிஷேகம், நண்பகலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை, கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க