செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது: மாவட்ட ஆட்சியா்

post image

கடந்த ஆண்டுகளை விட தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம்.

திருச்சேறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது: திருச்சேறை பகுதியில் அதிகளவு விவசாயம் நடைபெறுவதால் இப்பகுதி பெண்களுக்கு மத்திய அரசு நடத்தும் உணவு பதப்படுத்தும், மதிப்பு கூட்டுப்பொருள் தொடா்பான பயிற்சி அளிக்க உள்ளோம், அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணி பெண்கள் தொடா் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருந்து பெட்டகங்களை பயன்படுத்த வேண்டும். குறை பிரசவம், எடைகுறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த ஆண்டைவிட தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் வெகுவாக குறைந்துள்ளது. மகளிா் குழு கடன்களை தொழில் மற்றும் வளா்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றாா்.

முகாமில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 25 பேருக்கு திருமண, முதியோா் உதவி உள்ளிட்ட உதவி தொகைகள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 27 ஆயிரத்து 380 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க