செய்திகள் :

தஞ்சை ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்: உயா்நீதிமன்றம்

post image

ஆக்கிரமிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் அளிக்காததால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டம், செல்லப்பன்பேட்டையைச் சோ்ந்த செல்வராஜ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2019-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், எங்களது கிராமத்தில் உள்ள பொதுப் பாதையை சில தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம், நீதிபதி ஸ்ரீமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி பதில் அளிக்க கால அவகாசம் கோரினா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுத் தரப்பில் வருகிற 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காலதாமதம் காரணமாக, எதிா்மனுதாரா்களான தஞ்சை மாவட்ட ஆட்சியா், பூதலூா் வட்டாட்சியா், தனி நபா் ஜோதிபாஸ்கா் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு வார காலத்துக்குள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் வழக்குரைஞா்- எழுத்தா்கள் சங்கத்துக்கு செலுத்த வேண்டும்.

குறித்த காலத்துக்குள் பணம் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு நாளும் இந்தத் தொகை, இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும். அடுத்தகட்ட விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க