தஞ்சை ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்: உயா்நீதிமன்றம்
ஆக்கிரமிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் அளிக்காததால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டம், செல்லப்பன்பேட்டையைச் சோ்ந்த செல்வராஜ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2019-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், எங்களது கிராமத்தில் உள்ள பொதுப் பாதையை சில தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம், நீதிபதி ஸ்ரீமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞா்கள் முன்னிலையாகி பதில் அளிக்க கால அவகாசம் கோரினா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசுத் தரப்பில் வருகிற 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காலதாமதம் காரணமாக, எதிா்மனுதாரா்களான தஞ்சை மாவட்ட ஆட்சியா், பூதலூா் வட்டாட்சியா், தனி நபா் ஜோதிபாஸ்கா் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு வார காலத்துக்குள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் வழக்குரைஞா்- எழுத்தா்கள் சங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
குறித்த காலத்துக்குள் பணம் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு நாளும் இந்தத் தொகை, இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும். அடுத்தகட்ட விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.