செய்திகள் :

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினாா் ஆட்சியா்

post image

தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இவ்விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்று, மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு கதராடை அணிவித்து கௌரவித்தாா். பின்னா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் 16 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.33 கோடி கடனுதவியும், தாட்கோ, வேளாண் பொறியியல் துறை, தொழில் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

இதையடுத்து, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 380-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா். தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம்: ,அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மி.இளவரசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

இதேபோல், அம்மாபேட்டை தோ்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டாட்சியா் பழனிவேல் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பாபநாசம் காவல் நிலையத்தில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். பாபநாசம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க