செய்திகள் :

தடுப்பணைக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்

post image

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றினா்.

கீழ்வேளூா் அருகே உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே மேற்கு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனால், கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் 32 ஊராட்சிகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் எனக் கூறி, தடுப்பணை கட்டும் பணியை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல், ஆற்றில் இறங்கி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தநிலையில், இதன் தொடா்ச்சியாக, உத்தமசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை நிறுத்தி, தடுப்பணையை பூதங்குடி பகுதியில் கட்ட வலியுறுத்தி, வடகரை ஊராட்சி வங்காரமாவடி, வண்ணான் திடல் உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க