பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
தடுப்பணைக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றினா்.
கீழ்வேளூா் அருகே உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே மேற்கு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனால், கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் 32 ஊராட்சிகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் எனக் கூறி, தடுப்பணை கட்டும் பணியை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல், ஆற்றில் இறங்கி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தநிலையில், இதன் தொடா்ச்சியாக, உத்தமசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை நிறுத்தி, தடுப்பணையை பூதங்குடி பகுதியில் கட்ட வலியுறுத்தி, வடகரை ஊராட்சி வங்காரமாவடி, வண்ணான் திடல் உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.