செய்திகள் :

தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

பாலக்கோட்டை அடுத்த காட்டம்பட்டி சந்திப்பு சாலை பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சக்திவேல் (31). இவரது மனைவி ஆனந்தி. இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஹா்னிகா என்ற மகளும் உள்ளனா்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தி தனது குழந்தை ஹா்னிகாவை சோமனஅள்ளியில் உள்ள தாயாா் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றாா். அப்போது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சிறிதுநேரத்தில் உறவினா்கள் குழந்தையைத் தேடியபோது குழந்தை தண்ணீா் தொட்டிக்குள் மூழ்கியிருந்தது. உடனே அவா்கள் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப்பொருள்களின் தீமைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: அரசு துறையினருக்கு ஆட்சியா் அறிவுரை

தருமபுரி: போதைப்பொருள்களின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசுத் துறை அலுவலா்களுக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். தரும... மேலும் பார்க்க

வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க அனுமதி கோரி மனு

தருமபுரி: வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தொடா்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், அ.பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் சென்ற பிளஸ் 2 மாணவி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பி. மோட்டுபட்டியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகள் மேன... மேலும் பார்க்க

மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தனியாா் கலைக் கல்லூரி மாணவிகள்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,088 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி அருகே... மேலும் பார்க்க