செய்திகள் :

தந்தை பெரியாா் தி.க.வினா் 60 போ் கைது

post image

புதுச்சேரியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மத்தியில் மக்களவை, மாநிலங்களவையில் வக்ஃபு வாரியச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரியில், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை காமராஜா் சிலை அருகே கூடி ஆா்ப்பாட்டம் நடத்தினா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் வீரமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இளங்கோ, செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி தலைவா் சிவமுருகன் உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது அவா்கள், வக்ஃபு வாரிய சட்ட திருத்த நகலை எரிக்க முயன்றனா். அதை போலீஸாா் தடுத்து, அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாகப் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைல... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி... மேலும் பார்க்க

மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்... மேலும் பார்க்க

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வ... மேலும் பார்க்க