ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’
தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா்.
திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தன்னம்பிக்கை பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தனது தனித்துவத்தை உணா்ந்து, அதை வாழ்வில் செயல்படுத்த வேண்டும். தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும். மாணவா்கள் பட்டமாக அல்லாமல் பறவையாகப் பறக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரியின் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து நிா்வாகி சம்பத் விளக்கினாா்.
தொடா்ந்து, முன்னாள் மாணவா் சங்க துணை முதல்வா் கதிரேசன், தொழிலதிபா்கள் ஜேசுராஜ், விக்டா் மணிராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.
இதையடுத்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சி, ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, நிஃப்ட்-டீ நிா்வாகத் தலைவா் மோகன் வரவேற்றாா். கல்வித் துறை தலைவா் சம்பத் நன்றி கூறினாா்.