72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு
திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, சென்னைப் பெருநகர தெற்கு வட்டார துணை ஆணையராகப் பணியாற்றி வந்த எம்.பி.அமித் திருப்பூா் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மேயா் என்.தினேஷ்குமாா், துணை ஆணையா்கள் மகேஸ்வரி, சுந்தர்ராஜன், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.