பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மதுரையில் இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு ஹிந்துகள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டு வெற்றி ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைத்துள்ளது. ஹிந்துக்களின் ஒட்டு வங்கியை உருவாக்கியுள்ளது. இந்து முன்னணி கடந்த காலங்களில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரை ஆதரித்துள்ளது. ராமா் கோயில் கட்ட ஜெயலலிதாவே ஆதரவு தந்தாா்.
திருப்பூா் மாவட்ட அளவிலான சிவ பக்தா்கள் மாநாடு பல்லடத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், ஆன்மிக சொற்பொழிவு, மணி விழா, திருவிளக்கு பூஜை, இந்திய ரானுவ வெற்றி விழா ஆகியவை நடைபெற உள்ளன என்றாா்.