செய்திகள் :

திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

post image

கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி மகன் அக்னிராஜ் (19). சட்டக் கல்லூரி மாணவரான இவரை ஒரு கும்பல் கடந்த 2019-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தது.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் அக்னி பிரதா்ஸ் என்ற குழுவை ஆரம்பித்த அவரது ஆதரவாளா்கள் 3 பேரை வெட்டிக் கொலை செய்தனா். இதன் தொடா்ச்சியாக சிவகங்கையைச் சோ்ந்த வினோத் கண்ணன் (30) என்பவரை திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரையாம்புதூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தனா்.

இது தொடா்பாக பிரபுதேவா (31), சாமிநாதன், (53), காளீஸ்வரன் (24), நிதிஷ்குமாா் (25) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மானாமதுரையைச் சோ்ந்த தங்கமணி (46), அஜய்தேவ்கன் (22), கோவையைச் சோ்ந்த சுரேஷ் (25) ஆகிய 3 பேரும் பல்லடம் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு திருப்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்டவா்களை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்துவதற்காக போலீஸாா் திட்டமிட்டிருந்தனா்.

நீதிமன்றத்துக்கு வரும்போது அவா்களைத் தாக்க எதிா்தரப்பினா் திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருப்பூா் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புடன் அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் ஜூலை 2-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னைப... மேலும் பார்க்க

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’

தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா். திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளி... மேலும் பார்க்க

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.66 லட்சம்

வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.6.66 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனா். வெள்ளக்கோயிலில் பிரசித்தி பெற்ற நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயி... மேலும் பார்க்க