மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ளது அரசூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது அஸ்வாத் (36). காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சபூரா பேகம். கதிா்காமம் அரசு மருத்துவமனை ஊழியா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
முகமது அஸ்வாத் குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அண்மையில் சபூராபேகம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதனால் வீட்டில் தனியாக முகமது அஸ்வாத் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், முகமது அஸ்வாத்தை வியாழக்கிழமை கைப்பேசியில் தொடா்புகொள்ளமுடியவில்லை என சபூரா பேகத்திடம், அஸ்வாத்தின் சகோதரா் தெரிவித்தாராம். முகமது அஸ்வாத் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.