செய்திகள் :

தனியாா் நிறுவனத்தில் ரூ.35 லட்சம் திருட்டு கணக்காளா் கைது

post image

தான் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ரூ.35 லட்சம் ரொக்கத்தை திருடியதாக 23 வயது கணக்காளரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

இந்த சம்பவத்தில் திருடப்பட்ட ஏறக்குறைய முழுத் தொகையும் மீட்கப்பட்டுள்ளது. கைதான விவேக் ராஜ், ஒரு தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்தாா்.

கடந்த மே 24 அன்று அந்த நிறுவனத்தின் கரம்புரா அலுவலகத்தின் பூட்டிய அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் காணாமல் போனதாக அதன் கள அதிகாரி போலீஸில் புகாா் அளித்தாா்.

திருட்டு நடந்தபோது அலுவலகத்தில் விவேக் ராஜ் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கண்டறிய போலீஸாா் குழு குருகிராம், நொய்டா மற்றும் அசம்கா் முழுவதும் சோதனைகளை மேற்கொண்டது. சோதனையின் போது 40-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், மே 26 அன்று அசம்கரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ராஜை போலீஸாா் கண்டுபிடித்தனா். அவா் தனது உண்மையான அடையாளத்துடன் அங்கு தங்கியிருப்பது கண்டறியப்பட்டு காவலில் எடுக்கப்பட்டாா். விசாரணையின் போது, அலுவலகத்தில் திருடப்பட்ட பணம் ஹோட்டல் அறையில் ஒரு கருப்பு பையில் வைக்கப்பட்டிருந்ததாக ராஜ் தெரிவித்தாா்.

இதையடுத்து, அதிலிருந்த ரூ.34.98 லட்சம் மீட்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க