செய்திகள் :

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

post image

நடிகர் தனுஷை ஏமாற்ற நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, இதுவரை 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 25-வது படமான சக்தித் திருமகன் வருகிற செப். 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இறுதியாக, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் டிரைலரும் ரசிக்கும்படியாக இருப்பதால் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஜய் ஆண்டனி தன் இசைப் பயணம் குறித்தும் நடிகரான அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

அதில், “நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழக்கமானார். ஒருநாள், தன் கணவர் தனுஷுக்கு இசை மீது ஆர்வம் இருப்பதாகவும் அவருக்கு உதவுமாறும் ஐஸ்வர்யா கூறினார். தொடர்ந்து, திருமணமான புதிதில் தனுஷ் என்னைச் சந்திக்க வந்தார்.

சரி, எதையேனும் இசையமைத்துக் காட்டி ஏமாற்றி அனுப்பிவிடலாம் என நினைத்தேன். ஆனால், தனுஷுக்கு இசை தெரிந்திருந்தது. அதனால், அவர் வரும்போதெல்லாம் எனக்குப் பயமாகிவிட்டது. பின், அவர் கேட்டதை இசையமைத்துக் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இட்லி கடை டிரைலர் தேதி!

musician and actor vijay antony spokes about actor dhanush

ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் கு... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனிக்கு நடிகராகப் பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். இய... மேலும் பார்க்க

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

காந்தாரா சாப்டர் 1 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த காந்தாரா படத்தின் முதல் பாகம்,... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.10 மீட்டா் ஏா் ப... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங... மேலும் பார்க்க