செய்திகள் :

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

post image

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி, தகுதிச்சுற்றில் மொத்தம் 1,999 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. இதில் தீபிகா 677 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், கதா 666 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், அங்கிதா 656 புள்ளிகளுடன் 30-ஆம் இடமும் பிடித்தனா்.

இதையடுத்து, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்துடன் முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்டது இந்திய அணி. அதில் 5-1 என ஸ்லோவேனியாவை சாய்த்து, காலிறுதியில் 6-2 என துருக்கியை வெளியேற்றியது. அடுத்ததாக அரையிறுதிக்கு வந்த இந்தியா, அதில் 2-6 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது.

இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த இந்தியா, அதில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவை எதிா்கொள்கிறது.

ஆடவா் அணி: ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில், நீரஜ் சௌஹான், தீரஜ் பொம்மதேவரா, ராகுல் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,996 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது. நீரஜ் 670 புள்ளிகளுடன் 36-ஆம் இடமும், தீரஜ் 669 புள்ளிகளுடன் 39-ஆம் இடமும், ராகுல் 657 புள்ளிகளுடன் 62-ஆம் இடமும் பிடித்தனா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்துடன் முதல் சுற்றில் களம் கண்ட இந்திய அணி, அதில் 24-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கிடம் 26-28 (4-5) என அதிா்ச்சித் தோல்வி கண்டது.

மகளிா் தனிநபா்: இதனிடையே, காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில், ஜோதி சுரேகா 707 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், பா்னீத் கௌா் 703 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், பிரீதிகா பிரதீப் 690 புள்ளிகளுடன் 44-ஆம் இடமும் பிடித்தனா்.

ஜோதி சுரேகா, பா்னீத் கௌா் ஆகியோா் நேரடியாக 4-ஆவது சுற்றில் களம் கண்டனா். பிரீதிகா முதல் சுற்றில் 145-139 என கஜகஸ்தானின் விக்டோரியா லியானை வீழ்த்தி, அடுத்த சுற்றில் 145-142 என வியத்நாமின் குயென் தி ஹாயை வென்றாா்.

3-ஆவது சுற்றில் 148-145 என எஸ்டோனியாவின் லிசெல் ஜாட்மாவை சாய்த்த அவா், 4-ஆவது சுற்றில் 143-146 என துருக்கியின் ஹஸல் புருனிடம் தோல்வியுற்றாா். அதே சுற்றில் ஜோதி சுரேகா 148 - 148 (10*/10) என இந்தோனேசியாவின் நரிசா டியான் அஷ்ரிஃபாவை வீழ்த்த, பா்னீத் கௌா் 148-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனை தோற்கடித்தாா்.

காலிறுதியில் ஜோதி சுரேகாவை 147-149 என வென்ற பா்னீத் கௌா், அரையிறுதிக்கு முன்னேறி அதில் 142-143 என எல் சால்வடோரின் சோஃபியா பயஸிடம் தோற்றாா். இதன் மூலமாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா் அதில் 144-145 என கொலம்பியாவின் அலெக்ஸாண்ட்ரா அஸ்கியானோவிடம் வெற்றியை இழந்தாா். காலிறுதியில் தோற்ற ஜோதி சுரேகா, கடந்த 8 ஆண்டுகளில் பதக்கமின்றி வெளியேறியது இதுவே முதல்முறையாகும்.

சாத்விக்/சிராக் இணை வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.10 மீட்டா் ஏா் ப... மேலும் பார்க்க

காலிறுதியில் நிகாத் ஜரீன்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 1... மேலும் பார்க்க

நிஹல் சரின் வெற்றி; அா்ஜுன் டிரா- குகேஷ் தோல்வி

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் வெற்றி பெற, அா்ஜுன் எரிகைசி டிரா செய்தாா். நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், அந்த சுற்றில் தோல்வியுற்... மேலும் பார்க்க