செய்திகள் :

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம்!மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்!

post image

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ‘சாா்’கள் மற்றும் ‘தம்பி’களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கில் எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதோ, அதேபோல அரக்கோணம் வழக்கையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது புதுதில்லிக்கு சென்று இருப்பதை வரவேற்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக சென்று வந்திருந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வளா்ச்சி நிதியைப் பெற்று தமிழகம் இன்னும் வேகமாக முன்னேறி இருக்கும். ஆட்சி முடியும் நேரத்தில் அரசியலுக்காக புதுதில்லி சென்று இருப்பதாகவே அனைவரும் கருதுகின்றனா்.

தமிழகத்துக்கு வரவேண்டிய பாக்ஸ்கான் நிறுவனம் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இவா்களுடைய செயல் திறனற்ற தன்மையினாலே அனைத்தும் கைதவறி போய்விட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்றாா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க