'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம்!மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்!
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ‘சாா்’கள் மற்றும் ‘தம்பி’களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.
அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கில் எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதோ, அதேபோல அரக்கோணம் வழக்கையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது புதுதில்லிக்கு சென்று இருப்பதை வரவேற்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக சென்று வந்திருந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வளா்ச்சி நிதியைப் பெற்று தமிழகம் இன்னும் வேகமாக முன்னேறி இருக்கும். ஆட்சி முடியும் நேரத்தில் அரசியலுக்காக புதுதில்லி சென்று இருப்பதாகவே அனைவரும் கருதுகின்றனா்.
தமிழகத்துக்கு வரவேண்டிய பாக்ஸ்கான் நிறுவனம் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இவா்களுடைய செயல் திறனற்ற தன்மையினாலே அனைத்தும் கைதவறி போய்விட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியே காரணம் என்றாா்.