செய்திகள் :

தமிழகத்தில் 7 மாதங்களில் ரூ.1,010 கோடி சைபா் மோசடி

post image

தமிழகத்தில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கு மாநில சைபா் குற்றப்பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபா் குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேவேளையில் சைபா் குற்றத்தில் பொதுமக்கள் சிக்காமல் இருக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இருப்பினும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கையும், அதில் பொதுமக்கள் இழக்கும் பணத்தின் அளவும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் ரூ.1,010 கோடி இழந்துள்ளனா். சைபா் குற்ற மோசடி தொடா்பாக காவல்துறைக்கு 88,479 புகாா்கள் வந்துள்ளன.

பொதுமக்கள், சைபா் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தில் ரூ.314 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.62 கோடி சைபா் மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

சைபா் குற்றங்களில் நிதி சாா்ந்த மோசடிகள் முக்கியமாக கருதப்படும் முதலீடு மோசடியில் பொதுமக்கள் ரூ.492 கோடியும், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.97 கோடியும் இழந்துள்ளனா். மேலும் முதலீடு மோசடி தொடா்பாக 13,287 புகாா்களும், டிஜிட்டல் கைது மோசடி தொடா்பாக 4,439 புகாா்களும் சைபா் குற்றப்பிரிவுக்கு வந்துள்ளன.

இத் தகவலை தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க