தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை! - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தமிழில் படித்தவா்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாகத் தோ்வு செய்து பட்டப்படிப்பு (பி.ஏ.), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ.), இளம் முனைவா் (எம்.பில்.), முனைவா் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் பி.எட். பட்டமும் பெற்ற 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பாா்த்துக்கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பலா் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட அவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவா்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைப்பிடித்து வரும் தமிழுக்கு எதிரான கொள்கைகள் தான் காரணம்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், 8-ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தமிழாசிரியா் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியாா் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அவற்றில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியாா் பள்ளிகளிலும் தமிழாசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் தமிழாசிரியா்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம்.
அரசு உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியா் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ்ப் படித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியா்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.