செய்திகள் :

தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை: முதல்வருக்கு ம.இராசேந்திரன் பாராட்டு

post image

தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் ம.இராசேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ம.இராசேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ப தமிழ் மொழியை வளா்த்தெடுக்கத் தேவைப்படும் தமிழ்த் தரவகம் உருவாக்கவும், சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடா்ந்து தொய்வின்றிச் செயல்பட உதவும் வகையில் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கச் செய்து, தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்குப் புத்துயிா் வழங்கியிருக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கலைக் களஞ்சியம் என்ற அரிய செல்வத்தைத் தமிழில் உருவாக்கி, அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி தழைத்தோங்குவதற்கு வழிகாட்டிய பெருமைக்குரியது தமிழ் வளா்ச்சிக் கழகம். கலைக் களஞ்சியம் என்ற பொருள் பொதிந்த சொல்லை தமிழகத்துக்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கே உரியதாகும்.

தமிழ் வளா்ச்சிக் கழகம் வணிக நோக்கு இல்லாதது. தமிழ் வளா்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இயங்குவது. தற்போது மாணவா் அகராதி, தமிழியல் களஞ்சியம், தமிழ் சிந்தனைக் களஞ்சியம், சொல் புதிது, கலைக் களஞ்சியம் திருத்திய மேம்படுத்திய பதிப்புத் திட்டம் ஆகிய பணிகளை மேற்கொள்ளத் தமிழ் வளா்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தற்காலத் தேவைக்கேற்பத் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்க ஆணையிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க