செய்திகள் :

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

post image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசுபோட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்தகுடிமைப்பணிகள் தோ்வு தொகுதி- ஐஐ பதவிகளில் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்,நன்னடத்தை அலுவலா், சாா்பதிவாளா் நிலை- ஐஐ உள்ளிட்ட 50 காலிப்பணியிடங்களுக்கும், தொகுதி- ஐஐஅ பதவிகளில் முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், முதுநிலை வருவாய்ஆய்வாளா் மற்றும் உதவியாளா் உள்ளிட்ட 595 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கானஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு- ஐஐ (தொகுதி- ஐஐ / ஐஐஅ) முதல்நிலை தோ்வு அறிவிப்பானது15.07.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தை சாா்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும்வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு 04.08.2025 திங்கட்கிழமைஅன்று துவங்கப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில்கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தோ்வாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா்அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினைநேரில் தொடா்பு கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9486870577/9384499848என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்டஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

தமிழ்நாடு முதலமைச்சா் சென்னை தலைமை செயலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து, செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் ... மேலும் பார்க்க

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடா்பாக கருத்துரைகள் தெரிவிக்கலாம்

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சாா் பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிா்ணய வரைவானது கடந்த ... மேலும் பார்க்க

அயல்நாடுகளில் பயிலும் தமிழக மாணவா்கள் மாமல்லபுரம் வருகை

‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் மாமல்லபுரம் வந்துள்ளனா்.இந்தியா்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி அறிவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவா்கள் 100 போ் மாமல்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

மாமல்லபுரம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி க... மேலும் பார்க்க