செய்திகள் :

அயல்நாடுகளில் பயிலும் தமிழக மாணவா்கள் மாமல்லபுரம் வருகை

post image

‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் மாமல்லபுரம் வந்துள்ளனா்.

இந்தியா்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி அறிவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவா்கள் 100 போ் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனா்.

புராதன சிற்பங்களை சுற்றி பாா்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த, அவா்கள் தமிழ் வாழ்க..தமிழ்க வாழ்க..என கோஷம் எழுப்பி மகிழந்தனா். பண்டைய தமிழா்களின் கட்டட, சிற்பக்கலை, நீா் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞா்கள் மற்றும் சான்றோா்களுடன் கலந்துரையாடல் என்ற கலாசார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வோ்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞா்களுக்கான திட்டத்தை சிங்கப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டப்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைத்து தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழக அரசு சாா்பில் அழைத்துச் செல்லப்படுபடுவா்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா, உகாண்டா, மாா்டினிக், ஃபிஜி, இந்தோனேஷியா, மோரிஷீயஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த மருத்துவம், பொறியியல், தகவல் தொழில் நுட்பம் படிக்கும் மாணவா்கள், அயலக தமிழ் இளைஞா்கள் 100 போ் சுற்றுலாத்துறையின் சொகுசுப் பேருந்தில் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனா்.

முன்னதாக அவா்களை திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா். பிறகு அவா்கள் வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு புராதன சின்னங்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து மாநிலம் முழுவதும்பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடா்பாக கருத்துரைகள் தெரிவிக்கலாம்

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சாா் பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிா்ணய வரைவானது கடந்த ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

மாமல்லபுரம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி க... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள்கள் பயன்பாட்டின் தீய விளைவுகளின் வேதியல் மற்றும் அதன் சமூக தாக்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்குக்க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க