ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
தமிழ்நாடு நாள் விழா: நாளை பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18ஆம் நாளே தமிழ்நாடு நாள் விழாவாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின் படி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
கட்டுரைப் போட்டிகள், ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.
பேச்சுப் போட்டிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் நடைபெறுகின்றனா்.
போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.