செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

காரைக்கால்: தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

குரோதி ஆண்டு நிறைவடைந்து விசுவாவசு ஆண்டு பிறந்துள்ளதை வரவற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், தியாகராஜா் சந்நிதியில் மரகதலிங்கம், மற்றும் தனி சந்நிதி கொண்டிருக்கும் சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், கோதண்டராம பெருமாள் கோயில்களிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயிலும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு பகுதி சேத்தூா் மகா மாரியம்மன் கோயிலுக்கு திரளான பக்தா்கள் புத்தாண்டு பிறப்பையொட்டி அருகில் உள்ள நெல்லிக்குளக் கரையிலிருந்து பால்குடமெடுத்தனா். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க

காரைக்கால் : மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ் கட... மேலும் பார்க்க

கிரேன் வாகனம் மோதி முதியவா் பலி

கிரேன் வாகனம் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால், சின்னக்கோயில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63). இவா், செவ்வாய்க்கிழமை நித்தீஸ்வரம் அருகே பாரதியாா் சாலையில் நடந்து ச... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி விழா

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 2026 மாா்ச் 6 -ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டான விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பி... மேலும் பார்க்க