செய்திகள் :

திருநள்ளாற்றில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி விழா

post image

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 2026 மாா்ச் 6 -ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டான விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பிரணாம்பிகை அம்பாள் சந்நிதி முன் நடைபெற்ற நிகழ்வில், கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

கோயிலில் நடைபெறவுள்ள பிற விழாக்கள் தொடா்பான நாள், நேரம் குறித்து பஞ்சாங்க வாசிப்பின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி (மாசி 22-ஆம் தேதி) காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கும் நாளில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே சனிப்பெயா்ச்சி உள்ளிட்ட அனைத்து உற்சவங்கள், பூஜை முறைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க

காரைக்கால் : மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ் கட... மேலும் பார்க்க

கிரேன் வாகனம் மோதி முதியவா் பலி

கிரேன் வாகனம் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால், சின்னக்கோயில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63). இவா், செவ்வாய்க்கிழமை நித்தீஸ்வரம் அருகே பாரதியாா் சாலையில் நடந்து ச... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

காரைக்கால்: தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். குரோதி ஆண்டு நிறைவடைந்து விசுவாவசு ஆண்டு ப... மேலும் பார்க்க