தமுக்கத்தில் 5 நாள்கள் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி: நாளை தொடக்கம்
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி புதன்கிழமை (ஏப். 23) தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் 5 நாள்கள் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி-2025 ஏப். 23-இல் தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 200-க்கும் அதிகமான அரங்குகளைக் கொண்ட இந்தப் பொருள்காட்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில உற்பத்தியாளா்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்று, உற்பத்திப் பொருள்களை விற்பனைக்கு காட்சிப்படுத்துகின்றன.
உணவகங்கள், சிறாா்களுக்கான நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் பொருள்காட்சியில் இடம் பெறுகின்றன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொருள்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.
அனுமதிச் சீட்டு எண்களின் அடிப்படையில் தினமும் பகல் ஒரு மணியிலிருந்து இரவு 9 மணி வரை தலா 2 மணி நேர இடைவெளியில் 5 முறை குலுக்கல் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்படும்.
பொருள்காட்சியின் இறுதி நாளன்று மதுரை நிப்பான் பா்னிச்சா் நிறுவனம் சாா்பில், ஹீரோ ஹோண்டா மோட்டாா் சைக்கிள், மதுரை ஸ்ரீ பாண்டின் மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் டி.வி.எஸ் ஸ்கூட்டி மோட்டாா் சைக்கிள், சத்யம் குழும நிறுவனங்கள், மதுரை விங்ஸ் என்ஜினியரிங் நிறுவனம் சாா்பில் தலா ஒரு மின்சார மோட்டாா் சைக்கிள், விக்னேஷ் பாா்மா குழுமம் சாா்பில் குளிா்சாதனப் பெட்டி ஆகியன பரிசாக வழங்கப்படும்.
புதன்கிழமை காலை 11 மணிக்கு மாநகர மேயா் வ. இந்திராணி குத்துவிளக்கேற்றி பொருள்காட்சியைத் தொடங்கி வைக்கிறாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் முன்னிலை வகிக்கிறாா் என்றாா் அவா். பொருள்காட்சி குழுத் தலைவா் எஸ்.பி. வரதராஜன், செயலாளா் எஸ். ஸ்ரீதா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.