செய்திகள் :

தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

post image

விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தானம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் ( 32). கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக அவா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து அவருடைய 2 சிறுநீரகங்கள் மற்றும் உடலுறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. பின்னா் அவை சென்னை மற்றும் மேல்மருவத்தூா் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தருமபுரி அரசு மருத்துவமனையில் தானம் பெறப்பட்ட 27 ஆவது நிகழ்வாகும். தானம் வழங்கிய நபரின் உடலுக்கு மருத்துவமனை மருத்துவ பொறுப்பு முதல்வா் என். சிவகுமாா் மற்றும் மருத்துவா்கள் அஞ்சலி செலுத்தியபிறகு, உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட... மேலும் பார்க்க

வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை

தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா். தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது

தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட ... மேலும் பார்க்க