செய்திகள் :

தருமபுரி நீச்சல் குளத்தில் நாளை 4-ம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்

post image

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனடிப்படையில் நான்காம் கட்ட நீச்சல் பயிற்சி மே 13-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா்கள், ஆண்களுக்கு காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

பெண்களுக்கு காலை 9 மணி முதல் 10 வரையிலும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக ரூ.1770 இணையவழி வாயிலாக செலுத்துதல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க