செய்திகள் :

தருமபுரியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுதாகா், மாநில அமைப்புச் செயலாளா் கரிகாலன், மாவட்ட பொருளாளா் லோகநாதன் ஆகியோர கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட தணிக்கையாளா் யாரப்பாஷா, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் நவநீத கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆா்ப்பாட்டத்தில், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளா்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும்.

சுகாதார ஆய்வாளா் நிலை 2 பணியிடங்களை 2715 ஆக நிா்ணயிக்க கோரி பொது சுகாதாரத் துறை இயக்குநா் அரசுக்கு அனுப்பிய கோப்புக்கு உடனடி ஒப்புதல் வழங்கிட வேண்டும். 5,000 மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை 2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்டுமான தொழிலாளி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரில் ஒருவா் மீட்பு

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில், ஒருவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரூத்து ... மேலும் பார்க்க

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியா்கள் தருமபுரி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் சங்க கிளைத் தலைவா் ஏ.சங்கா் தலைமை வக... மேலும் பார்க்க

‘புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்’

தருமபுரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

அரூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையில் வேளாண் பணிகளை செய்வதற்கு ஏதுவாக, வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க