முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
தருமபுரியில் டீசல் திருடி விற்பனை: 8 போ் கைது; 415 லிட்டா் டீசல் பறிமுதல்
தருமபுரியில் நெடுஞ்சாலை பகுதியில் முறைகேடாக டீசல் திருடி விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் லாரிகளிலிருந்து டீசலை திருடி அதில் மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளை கலப்படம் செய்து முறைகேடாக விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதில் வாகன (லாரி) ஓட்டிகள் சிலரும் உடந்தையக இருப்பதாகவும், கலப்பட டீசலை பயன்படுத்துவதால் வாகன என்ஜின்கள் பழுதடைந்து விடுவதாகவும், இதனால் லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளா்கள் நட்டமடைந்து வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி வாகன உரிமையாளா்கள் பாலக்கோடு சரக டிஎஸ்பி மனோகரனிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை முதல், காரிமங்கலம் நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனா்.
அப்போது பொன்னேரி, கெரகோடஅள்ளி, அன்பு நகா் ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் சிலா் முறைகேடாக டீசல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (32), செல்வராஜ் (22), கோபி (23), சுப்பிரமணி (65), சக்திவேல் (47), பிரவின்குமாா் (25), செல்வராஜ் (38), கலைச்செல்வன் (35) ஆகியோா் டீசலை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுபோல ஏராளமானோா் டீசல் திருட்டில் ஈடுபடுவதுடன் அவற்றில் கலப்படம் செய்து குடிசைத் தொழில் போல பல இடங்களில் விற்பனை செய்து வந்ததைக் கண்டறிந்தனா். இது தொடா்பாக ஆங்காங்கே டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த கேன்கள், பேரல்கள் உள்ளிட்டவைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.