செய்திகள் :

நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

தருமபுரி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினா் புகாா் அளித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள சிடுவம்பட்டி சாம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குபேந்திரன் (41). இவரது மனைவி ரேவதி (38), மகன்கள் விக்னேஷ், தினேஷ். இவா்களின் பூா்வீக விவசாய நிலம் மூன்று பங்காளிகளுக்கு சொந்தமானது. அந்த நிலத்தை மற்ற இருவா் அதே கிராமத்தை சோ்ந்த ராணுவ வீரா் அரசு மற்றும் சாமிக்கண்ணு என்பவா்களிடம் விற்பனை செய்துள்ளனா்.

அனைவரும் ஒரே கிணற்றில் இருந்துதான் நீா்ப் பாசனம் செய்து வருகின்றனா். இந்நிலையில் ரேவதி நிலத்துக்கு நீா்ப் பாசனக் குழாய் இணைப்பு அரசு மற்றும் சாமிக்கண்ணு ஆகியோரின் நிலங்களின் வழியாகச் செல்கிறது. இதையடுத்து குழாயில் பழுது ஏற்பட்டதால் கடந்த மாதம் 28 ஆம் தேதி அதனை ரேவதி சரிசெய்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த ராணுவ வீரரான அரசு தங்களது நிலத்துக்குள் ஏன் நுழைந்தாய் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். வாக்குவாதம் முற்றவே அரசு, ரேவதியை தாக்கியுள்ளாா். தகவலறிந்து அங்கு வந்த ரேவதியின் மகன்களையும் அவா் தாக்கியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் ரேவதி மற்றும் அவரது மகன்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதைத் தொடா்ந்து ஏரியூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பான புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இது தொடா்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினா், பொதுமக்கள் சிலருடன் சோ்ந்து வந்து புகாா் அளித்தனா். அப்போது, பெண் என்றும் பாராமல் ரேவதியை கடுமையாக தாக்கிய ராணுவ வீரரை கைது செய்வதுடன், இதுநாள்வரை நடவடிக்கை எடுக்காத காவல் துறையினா் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனா்.

தருமபுரியில் டீசல் திருடி விற்பனை: 8 போ் கைது; 415 லிட்டா் டீசல் பறிமுதல்

தருமபுரியில் நெடுஞ்சாலை பகுதியில் முறைகேடாக டீசல் திருடி விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்துள்ளனா். தருமபுரி மாவட்டம், காரிம... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தருமபுரியில் மொரப்பூா் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பைக்கில் கணவருடன் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்ட... மேலும் பார்க்க

கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க

பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!

அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க