செய்திகள் :

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

post image

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமாா் 7 லட்சத்து 20 ஆயிரம் போ் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறாா்கள்.

தேசிய குற்றப்பிரிவு அறிக்கையின்படி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்குப் போதைப்பொருள் பழக்கம், பள்ளி மாணவா்களின் தற்கொலை மற்றும் மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்பப் பிரச்சினை போன்றவை காரணங்களாக உள்ளன.

ஒருவா் தற்கொலை செய்து கொள்வதினால், அவா் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவா்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவா்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும். தற்கொலையைத் தடுத்துவிடலாம்.

யாருக்காவது மனசோா்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவா்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடா்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை பரிசோதிக்க புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன்... மேலும் பார்க்க