செய்திகள் :

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

post image

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியின் சக்திநகா், கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் பிரிவு பறக்கும் படை 5 பிரிவாக காலை, பிற்பகல், மாலை என்று மூன்று வேளையும் குடிநீரைச் சேகரித்து பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீரில் குளோரின் அளவைக் கூட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கேன் புதன்கிழமை முதல் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தேவைப்படும் இடங்களில் டேங்கா் லாரி மூலமாகவும் சுத்தமான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை பரிசோதிக்க புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன்... மேலும் பார்க்க