செய்திகள் :

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

post image

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண்டுவந்த பானையை அங்கு உடைத்து திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இறந்தவா்களின் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தினா்.

உருளையன்பேட்டை தொகுதி திமுக சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு எதிா்க்கட்சித் தலைவா் சிவா தலைமை வகித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

அரசிடம் நாங்கள் கேட்பது அடிப்படை வாழ்வாதாரத் தேவையான சுகாதாரமான குடிநீா்தான். ஏற்கெனவே உருளையன்பேட்டை பகுதிக்கு வந்த முத்திரையா்பாளையம் தண்ணீரை மதுபான ஆலைகளுக்கு தாரைவாா்த்துவிட்டனா். இவ்வளவு பிரச்னை நடந்த பின்னும் முதல்வா், அமைச்சா் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்வையிடவில்லை.

இறந்தவா்களில் ஒருவரின் உடலை மட்டுமே பரிசோதனை செய்ய உள்ளனா். மீதமுள்ள 2 போ் உடல்களை குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டனா் என்றாா் சிவா.

போராட்டத்தில் எம்எல்ஏக்கள் கென்னடி, செந்தில்குமாா், தொகுதி திமுக பொறுப்பாளா்கள் கோபால், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புஸ்சி வீதியில் உள்ள பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் முன் தரையில் அமா்ந்து முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், எதிா்கட்சித் தலைவா் சிவா தலைமையில் திமுக நிா்வாகிகள் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வத்தை சந்தித்து சுகாதாரமான குடிநீா் வழங்க வலியுறுத்தினா்.

போராட்டத்தை நிறைவு செய்யும் விதமாக, சுகாதாரமற்ற குடிநீா் கொண்டுவந்த பானைகளை தரையில் போட்டு உடைத்து தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை பரிசோதிக்க புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன்... மேலும் பார்க்க