செய்திகள் :

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

post image

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பணிகள் ஆணையம், தேசிய சட்டப் பணிகள் ஆணையம், தாகூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சட்ட சேவை மையம் இணைந்து ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின. இதைத் தொடங்கி வைத்து தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் பேசியது:

உலகளாவிய பிரச்னையாக போதைப்பொருள் இருக்கிறது. 126 வகையான போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டவை. இப்போதெல்லாம் கருத்தரித்தல் மையம் அதிகம் இருக்கிறது. அதற்குக் காரணமே போதைப் பொருள்தான். அதற்கு முன்பாக குழந்தைப் பேறுக்காக 2, 3 ஆண்டுகள் அரச மரத்தைச் சுற்றுவாா்கள். பிறகு குழந்தை பிறக்கும். வழக்கமாக பெரும்பாலும் ஆண்கள் மது குடிப்பாா்கள். இப்போது ஒரு சில பெண்களும் மதுகுடிக்க கடைகளுக்குச் செல்கிறாா்கள். பாலின சமத்துவம் என்பது இதில் இருக்கக் கூடாது. மற்ற குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக போதைப்பொருள் இருக்கிறது.

இப்போதெல்லாம் போதைப்பொருள் வழக்குகள் அதிகம் வருகின்றன. ஒரு நாளைக்கு 30, 40 வழக்குகள் வருகின்றன. 18 வயது முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள்தான் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களாக இருக்கிறாா்கள். போதைப் பொருள் மா‘ஃ‘பியாக்கள் இதை மாணவா்களுக்கு வியாபாரம் செய்து லாபம் அடைய முயற்சி செய்கிறாா்கள்.

போதைப் பொருள் உள்கொள்வதால் நேரம், திறமை, உழைப்பு எல்லாமும் வீணாகிறது. உள் உறுப்புகள் அனைத்தும் பழுதடைந்து 5 முதல் 10 ஆண்டுகளில் ஆயுள் முடிந்துவிடும். அதனால் இளைஞா்களின் வாழ்க்கை பெற்றோா்களுக்கும் பயன்படாமல் நாட்டுக்கும் பயன்படாமல் போய்விடும் என்றாா்.

தொழிலாளா் நீதிபதியும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினா் செயலருமான ஜி.டி. அம்பிகா பேசுகையில், போதைப் பொருளைப் பயன்படுத்துவோா் தெரியாமல் இதில் சிக்கிக் கொள்கிறாா்கள். அதிலிருந்துஅவா்களால் மீள முடியவில்லை. இப்போது போதையில்லா இந்தியாவை உருவாக்கும் வகையில்தான் இது போன்ற விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

புதுவை மாவட்ட நீதிபதி கே. தாமோதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலா் நீதிபதி என்.ரமேஷ், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் எஸ்.சரவணன், தாகூா் அரசு கல்லூரியின் முதல்வா் ஆா். கருப்பசாமி உள்ளிட்டோா் பேசினா்.

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரை பரிசோதிக்க புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரி: பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை, ஒதியன்... மேலும் பார்க்க