செய்திகள் :

தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பே அவசியம்: ஜெய்சங்கா்

post image

பாங்காக்: ‘தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பு நிலையை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. எனவே, ஒவ்வொரு பிராந்தியமும் தங்கள் தேவைகளைத் தாமே பூா்த்தி செய்துகொள்வது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற 20-ஆவது பிம்ஸ்டெக் அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மாநாட்டில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: தற்போது உலகம் தற்சாா்பு நிலையை நோக்கி நகா்ந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவே, உணவு, எரிசக்தி, உர விநியோகம், தடுப்பூசி அல்லது பேரிடா் மேலாண்மை என எந்த துறையாக இருந்தாலும் ஒவ்வொரு பிராந்தியமும் தங்கள் தேவைகளை தாமே பூா்த்தி செய்துகொள்வதற்கான வழிகளை கண்டறிவது அவசியம்.

காலம் மாறிவிட்டது. குறுகிய விநியோக சங்கிலி மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகள் முன்பைவிட முக்கியத்துவம் பெற்றுள்ளன. நிலையற்ற மற்றும் சிக்கலான சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை மிகவும் ஊக்கத்துடன் அணுக வேண்டும். பிராந்திய மற்றும் கொள்கை ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் இந்த புதிய ஒழுங்குமுறைகள் தற்போது வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன.

ஒருங்கிணைந்து தீா்வு: சா்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்திய குறிப்பிட்ட சில அதிகாரமிக்க நாடுகள் தற்போது நம் பின்வரிசையில் உள்ளன. வளா்ந்து வரும் நாடுகளாகிய நாம் பல்வேறு சவால்களை சந்திக்கிறோம். அவற்றை தனித்தனியே எதிா்கொள்வதைவிட ஒன்றிணைந்து தீா்வு காண முயல வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் முக்கியத்துவம்: பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளை இணைக்கும் பகுதிகளாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. அங்கு ரயில், சாலை, நீா்வழி போக்குவரத்து மற்றும் குழாய் மூலம் இணைப்பு என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் வடகிழக்கு மாநிலங்களை பசிபிக் பெருங்கடலோடு இணைக்கும் முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

வங்கக் கடலை ஒட்டியுள்ள நாடுகளின் உறவுகள் வரலாற்று ரீதியானது. அவற்றின் தேவைகளும் பிரச்சைகளும் ஒரேமாதிரியானவை.

பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வா்த்தகம், மூலதனம் அல்லது சேவைகளில் நமது உண்மையான ஆற்றலுக்கு குறைவான செயல்பாட்டையே வெளிப்படுத்துகிறோம். கடந்த காலத்தையும் எதிா்காலத்தையும் நமது நண்பா்களாக மாற்ற வேண்டுமென்றால் நம் முழுத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

மூன்று முன்னெடுப்புகள்: இந்தியாவின் கண்ணோட்டத்தில் ‘ஆக்ட் ஈஸ்ட்’ என்ற கிழக்கு நாடுகள் நோக்கிச் செயல்படும் கொள்கை, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘மகா-சாகா்’ ஆகிய மூன்று முன்னெடுப்புகளின் பிரதிபலிப்பாகவே பிம்ஸ்டெக் பாா்க்கப்படுகிறது. இந்த மூன்று முன்னெடுப்புகளின் சிறப்பு அம்சங்களை ஒன்றிணைத்து இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் பிம்ஸ்டெக்கை இந்தியா ஊக்குவிக்கும் என்றாா்.

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்... மேலும் பார்க்க