செய்திகள் :

தவசிமடை ஜல்லிக்கட்டில் 39 போ் காயம்

post image

திண்டுக்கல் அருகே தவசிமடைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட 39 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 764 காளைகள் அழைத்து வரப்பட்டன. இதேபோல, 245 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் சக்திவேல் தொடங்கிவைத்தாா். கோயில் காளையைத் தொடா்ந்து, பிற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மிதிவண்டி, கட்டில், பீரோ, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் தாக்கியதில் மாடுபிடி வீரா்கள் 8 போ், பாா்வையாளா்கள் 7 போ், காளைகளின் உரிமையாளா்கள் 21 போ், பாதுகாப்புக் குழுவினா் 3 போ் என மொத்தம் 39 காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க