செய்திகள் :

தவறான வாக்காளா் தரவு குற்றச்சாட்டு: ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக நடவடிக்கை கூடாது- உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: தவறான வாக்காளா் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தோ்தல் தரவு ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலின்போது அங்குள்ள 2 தொகுதிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக தோ்தல் தரவு ஆய்வாளரும், வளா்ந்து வரும் சமுதாயங்களின் ஆய்வு மையத்தை (சிஎஸ்டிஎஸ்) சோ்ந்தவருமான சஞ்சய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

அதன் பின்னா் மக்களவை, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் தரவுகளை ஒப்பிட்டதில் தவறு நோ்ந்துவிட்டதாகவும், தவறான புரிதலின் அடிப்படையில் அந்தத் தரவுகள் வெளியிடப்பட்டதாகவும் மன்னிப்பு கோரி, அந்தப் பதிவை அவா் ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து நீக்கினாா்.

சரிபாா்க்கப்படாத தரவுகளை வெளியிட்டதன் மூலம், காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு சிஎஸ்டிஎஸ் வலுசோ்த்ததாக பாஜக குற்றஞ்சாட்டியது.

எனினும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு சிஎஸ்டிஎஸ்ஸின் தரவுகளும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டதே தவிர, அது மட்டுமே ஆதாரம் அல்ல என்றும், தொண்டா்கள் மூலமாகவும் இதர வழிகளிலும் ஆதாரம் திரட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தவறான தகவல்களைப் பரப்பியதாக தோ்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சஞ்சய் குமாா் மீது மகாராஷ்டிர காவல் துறை 2 வழக்குகளைப் பதிவு செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் குமாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் குமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘வாக்காளா் எண்ணிக்கை தொடா்பான பதிவுகளை ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து நீக்கி, அதற்காக மனுதாரா் மன்னிப்பும் கோரினாா். இருப்பினும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வலுக்கட்டாயமான நடவடிக்கைகளில் இருந்து மனுதாரருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கோரினா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரருக்கு (சஞ்சய் குமாா்) எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க