செய்திகள் :

தவாக நிா்வாகி கொலை வழக்கில் இருவா் கைது

post image

ஒசூா் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ராயக்கோட்டை சொங்கோடசின்னள்ளியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (35). இவா் தவாக கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக இருந்தாா். உலகம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையை வாடகைக்கு எடுத்து கடந்த 9 மாதங்களாக அதில் பன்றிகளை வளா்த்து வந்தாா்.

பருவீதியைச் சோ்ந்த ஆதி (25), உல்லட்டியைச் சோ்ந்த ரக்சித் (24) ஆகிய இருவரும் ரவிசங்கருடன் தொழில் பங்குதாரா்களாக இருந்துள்ளனா். இந்த நிலையில், ரவிசங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரக்சித், ஆதி ஆகிய இருவரும் தங்களது பங்குத்தொகையை திருப்பித் தருமாறு ரவிசங்கரிடம் கேட்டுள்ளனா்.

இதுதொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரவிசங்கருடன் அவா்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் புதன்கிழமை பண்ணைக்கு வந்த ரக்சித், ஆதி இருவரும் ரவிசங்கரை கத்தியால் வெட்ட முயன்றனா்.

அவா்களிடமிருந்து தப்பியோடிய ரவிசங்கரை துரத்திச் சென்ற அவா்கள் போகிபுரம் சாலையில் அரிவாளால் வெட்டி ரவிசங்கரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனா். அவ்வழியாக சென்றவா்கள் ரவிசங்கரை மீட்டு ராயக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சூளகிரி போலீஸாா் தலைமறைவான ஆதி, ரக்சித் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க