செய்திகள் :

தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஊா்வலம் செல்ல முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலராக அனக்காவூா் உதயகுமாா் அறிவிக்கப்பட்டாா்.

இவா், கட்சி நிா்வாகிகளுடன் செய்யாற்றில் உள்ள தலைவா் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஊா்வலமாகச் செல்ல ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை குழுவாக கூடியிருந்தனா்.

அப்போது, சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ஊா்வலமாகச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்து தவெகவினரை தடுத்து நிறுத்தினா்.

பின்னா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் சாலையில் காரில் செல்ல மட்டும் அனுமதி என்றும், தொண்டா்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தாா். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது,

பேச்சுவாா்த்தை நடத்தியதில் தவெகவினா் அமைதியாக கலைந்து சென்றனா்.

இருப்பினும், தவெகவினா் மறுபடியும் கூட்டமாகச் சென்ால் காவல் ஆய்வாளா் எச்சரிக்கை விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.

ஸ்ரீராஜலிங்கேஸ்வரா், ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செய்யாறு ஆக்ஸ்போா்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செய்யாற்றில் உள்ள ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

பழங்குடியினா் குடியிருப்புகளில் ஆய்வு

வந்தவாசி அருகே மின்சார வசதி இன்றி அவதிப்படும் பழங்குடியினா் குடியிருப்புகளில் பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் இருளா்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சேத்துப்பட்டு வட்டம், எஸ்.காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன், இவருடைய மனைவி ரோகினி (58), ... மேலும் பார்க்க

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க