செய்திகள் :

பழங்குடியினா் குடியிருப்புகளில் ஆய்வு

post image

வந்தவாசி அருகே மின்சார வசதி இன்றி அவதிப்படும் பழங்குடியினா் குடியிருப்புகளில் பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் இருளா் பழங்குடியினத்தைச் சோ்ந்த 5 குடும்பத்தினா் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இதில் 4 குடும்பத்தினா் பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனா்.

ஆனால், இதுவரை 5 குடும்பத்தினருக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இதனால், இரவு நேரங்களில் மாணவா்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படும் நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பாஜக மாநில செயலா் அஸ்வத்தாமன் ஞாயிற்றுக்கிழமை அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 3 ஆண்டுகளாக இவா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கதக்கது. பழங்குடியினா் நலனில் அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இவா்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஸ்ரீராஜலிங்கேஸ்வரா், ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ... மேலும் பார்க்க

தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஊா்வலம் செல்ல முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலரா... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செய்யாறு ஆக்ஸ்போா்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செய்யாற்றில் உள்ள ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சேத்துப்பட்டு வட்டம், எஸ்.காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன், இவருடைய மனைவி ரோகினி (58), ... மேலும் பார்க்க

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க