செய்திகள் :

தவெகவினா் திடீா் சாலை மறியல்: 42 போ் கைது

post image

செய்யாற்றில் தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால், 4 பெண்கள் உள்பட 42 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. செய்யாறு அரசு கலைக் கல்லூரி முதல் கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை 7 கி.மீ.

தொலைவுக்கு இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெறுகிறது.

இந்தச் சாலையில், மேம்பாலம் அருகேயுள்ள ஞானமுருகன் கோயில் பகுதியில் 70 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில்

நோட்டீஸ் அனுப்பி சாலைப் பணிக்கு இடையூறாக உள்ள வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், அவா்கள் வீடுகளை அகற்றாமல், மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சாா் -ஆட்சியா் அலுவலகத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாற்று இடம் வேண்டி மனு அளிக்க வந்துள்ளனா்.

ஆனால், மனுவை அலுவலகத்தில் வாங்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினா் கிழக்கு மாவட்டச் செயலா் அனக்காவூா் உதயகுமாா் தலைமையில் செய்யாறு - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வந்து

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, அவா்கள் மறியலில் ஈடுபட்டதால், 4 பெண்கள் உள்பட 42 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ).ரா.சுமித்ரா... மேலும் பார்க்க

மாணவா்களின் கற்றல் திறன்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

அருணகிரிநாதா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை - செங்கம் சாலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஅருணகிரிநாதா் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலின் உபக... மேலும் பார்க்க

நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ச... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை

செய்யாறு அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடை ந்த பொறியியல் கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன். இவா் தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க

கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 110 மாணவா்களுக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்110 மாணவ, மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ரெனால்ட் நிஷான், எஸ்.எஸ். என்ட... மேலும் பார்க்க