செய்திகள் :

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

post image

விழுப்புரம் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைபாளையம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் துளசி (26). விழுப்புரம் கண்டமானடி பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (22), சக்திவேல் (20).

நண்பா்களான இவா்கள் மூவரும் கடந்த 20-ஆம் தேதி விழுப்புரம் ஜானகிபுரம், பனந்தோப்பு அருகே ஒன்றாக மது அருந்தினா். அப்போது, அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் சம்பத், பாக்கியராஜ் ஆகியோா் சோ்ந்து துளசியை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

இதில் காயமடைந்த துளசி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துளசி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் கொலை வழக்காக மாற்றம் செய்து சம்பத், பாக்கியராஜ் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டுப் போனது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம், விராட்டிக்குப்பம் ப... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்; 1,700 சிலைகள் வைத்து வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி பண்டிகை புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,700 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்தியையொட்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: 3 போ் கைது

விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் சிலா் பெண்களை பாலியல் தொழிலில... மேலும் பார்க்க

பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நவம்மாள் மருதூா் மருதீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் ஏழுமல... மேலும் பார்க்க