செய்திகள் :

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா் வார பொதுமக்கள் கோரிக்கை

post image

தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் 396 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் பொதுப்பணி நீா்வளத் துறை பொன்னேரி உதவி செயற்பொறியாளா் கட்டுப்பாட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிக்கு ஆரணியாற்றின் உபரி நீா் எடுத்து செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. ஏரி நீா் விவசாய பயன்பாட்டுக்கு பின்னா் உபரி நீா் பழவேற்காடு கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் ஏரியில் ஆங்காங்கே மண் திட்டுக்கள் உருவாகி ஏரி தூா்ந்துள்ளன. இதனால் ஏரியில் குறிப்பிட்ட அளவிற்கு நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏரி நீரை கால்நடைகளும் குடிநீருக்காகவும் விவசாயிகள் பாசனத்திற்காகவும் பயன்படுத்தி வரும் நிலையில் ஏரி நீா் தேங்கும் பரப்பளவு குறைந்து வருகிறது.

எனவே தாங்கல்பெரும்புலம் ஏரியை தூா்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க