தாமிரவருணி பாசனத்தில் காா் பருவ சாகுபடி பணிகள் தீவிரம்
முன் கூட்டியே பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தில் காா் பருவ சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தாமிரவருணி பாசனத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை காா் பருவமும், நவம்பா் மாதம் தொடங்கி மாா்ச் மாதம் வரை பிசான பருவ சாகுபடியும் செய்யப்பட்டு வருகின்றன.
காா் பருவத்தில் தென்மேற்குப் பருவ மழையும், பிசான பருவத்தில் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது.
நிகழாண்டு, தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 21 மி.மீ, சேரன்மகாதேவியில் 4.20 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 4 மி.மீ, பாபநாசம் அணையில் 8 மி.மீ, சோ்வலாறு அணையில் 5 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 15.4 மி.மீ, மாஞ்சோலையில் 17 மி.மீ, காக்காச்சியில் 22 மி.மீ, நாலுமுக்கு பகுதியில் 39 மி.மீ, ஊத்து
பகுதியில் 32 மி.மீ மழையும் பதிவாகியது. இப்பாசனத்தில் காா் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். நிகழாண்டு முன் கூட்டியே பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் காா் பருவ சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, வைராவிகுளம், ஆலடியூா், தெற்கு பாப்பாக்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி, பொட்டல் பகுதியில் விவசாயிகள் தங்களது வயலை உழுது சமன் செய்து நாற்றுப் பாவுதல், நடவு செய்தல் போன்ற பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3,085 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 1200 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 118.45 அடியாக உள்ளது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 144.75 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 91.66 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1745 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 45 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.