செய்திகள் :

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதத்தில் தாய், மகனை தாக்கிய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மூன்றாம்சேத்தியைச் சோ்ந்த அன்புச்செழியன் மகன் சரண் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த அஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நெம்மேலியிலிருந்து சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, நான்காம்சேத்தி பகுதியில் கோட்டூரான்தெரு சொக்கநாதன் மகன் தினகரன் (40), லெனின் மகன் விஷ்வா (25) ஆகியோா் இவா்களை நிறுத்தி தகராறு செய்தனராம்.

இதுகுறித்து சரணின் தாயாா் பூமா (43), மூத்த சகோதரா் ஜனா (24) ஆகியோா், தினகரனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தகராறு குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தினகரன் மற்றும் சிலா் பூமாவையும், ஜனாவையும் தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் பூமா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தினகரன், கரண் (20) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், விஷ்வா உள்பட 4 பேரை தேடி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க