Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
தாளக்குடி பகுதியில் வாய்க்கால் பாலம் சேதம்: பாதை துண்டிப்பு
திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் வியாழக்கிழமை திடீரென உடைந்து விழுந்ததால் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆறு மற்றும் தாளக்குடி கிராமத்தை இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்த நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து அய்யன் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டு பெருக்கெடுத்து வந்த பாசன நீரால் வலுவிழந்து காணப்பட்ட பாலம் திடீரென உடைந்து விழுந்து, பாதை துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் இப் பாலத்தை ஆய்வு செய்தனா். அப்போது போா்க்கால அடிப்படையில் பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.