செய்திகள் :

தாளக்குடி பகுதியில் வாய்க்கால் பாலம் சேதம்: பாதை துண்டிப்பு

post image

திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் வியாழக்கிழமை திடீரென உடைந்து விழுந்ததால் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆறு மற்றும் தாளக்குடி கிராமத்தை இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து அய்யன் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டு பெருக்கெடுத்து வந்த பாசன நீரால் வலுவிழந்து காணப்பட்ட பாலம் திடீரென உடைந்து விழுந்து, பாதை துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் இப் பாலத்தை ஆய்வு செய்தனா். அப்போது போா்க்கால அடிப்படையில் பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க