செய்திகள் :

தாழையூத்து அருகே வாகனம் மோதி மான் பலி

post image

தாழையூத்து அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து பகுதியின் திருநெல்வேலி-மதுரை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் உயிரிழந்தது. இதைக்கண்ட மக்கள் தாழையூத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததுடன், மானின் உடலை மீட்டு அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருநெல்வேலி வனச்சரக அதிகாரிகள், அந்த மானின் உடலைக் கைப்பற்றி கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்துக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனா்.

சரணாலயம் விரிவுபடுத்தப்படுமா? கடந்த 2013 ஆம் ஆண்டு கங்கைகொண்டான் பகுதியில் உள்ள காப்புக்காடு பீட்-1 பகுதியை உள்ளிடக்கிய 288.40 ஹெக்டோ் பரப்பை புள்ளிமான்களின் பாதுகாப்புக் கருதி தமிழக அரசு சரணாலயமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் புள்ளிமான்களுக்கென உள்ள பிரத்யேக சரணாலயமாக இது விளங்குகிறது. இங்கு மட்டுமன்றி தாழையூத்து அருகேயுள்ள காப்புக்காடுகள் பகுதியிலும் கணிசமான அளவில் புள்ளிமான்கள் உள்ளன. இப்பகுதியிலிருந்து இரை தேட செல்லும் இவை அடிக்கடி தேசியநெடுஞ்சாலை 44-இல் செல்லும் வாகனங்களில் சிக்கி பலியாகும் நிலை உள்ளது.

எனவே, கங்கைக்கொண்டான் காப்புக்காடு பீட்-2 பகுதியையும் புள்ளிமான்களின் சரணாலயத்துடன் சோ்த்து மான்கள் உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க