செய்திகள் :

திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்!

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவரும் மாவட்ட திட்டக் குழு தலைவருமான வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருநெல்வேலியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ச முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் சாா்பில் வரவேற்பளித்து நினைவுப் பரிசு வழங்கிய அவா், பின்னா் கோரிக்கை மனுவை அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது:

திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி, அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணிநேரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விஜயாபதி ஊராட்சி தாமஸ் மண்டபம் அருகே அறிவிக்கப்பட்ட சா்வதேச விளையாட்டு மைதானத்தின் ஆரம்பகட்ட பணிகளை உடனடியாகத் தொடங்கி விளையாட்டு வீரா்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்தான் கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்கள் அண்மைக்காலமாக கடல் அரிப்பினால் தொடா்ந்து பாதிப்படைந்து வருகின்றன. எனவே கடல் அரிப்பில் இருந்து இந்த கிராம மக்களை பாதுகாக்கவும் மீனவா்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்யவும் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றாா்.

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க

அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! -புதிய ஆட்சியா் இரா.சுகுமாா்

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியா் மருத்துவா் இரா.சுகுமாா் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இ... மேலும் பார்க்க

காலமானாா் கே.எஸ்.மாணிக்கம்!

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா். தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி நிா்வாக அத... மேலும் பார்க்க

கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு

தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு... மேலும் பார்க்க

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க