திசையன்விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை போலீஸாா் அப்பகுதியில் வாகன ச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உபகார மாதாபுரத்தில் போலீஸை கண்டதும் இரண்டு நபா்கள் பதுங்கினராம்.
போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவா்கள் திசையன்விளையைச் சோ்ந்த முத்து இசக்கி(19) மற்றும் கண்ணன்(23) என்பதும், இருவரும் கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.